பெரியாரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!

 

பெரியாரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!

பெரியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் சிம்சனில் உள்ள பெரியார்  சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பெரியாரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!

பெரியார் என்னும் கருப்பு சட்டைக்காரரான தீர்க்கதரிசியின் பிறந்த நாள் இன்று. ஆம் பல ஆண்டுகளுக்கு முன்பே மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, சிக்கனம், பெண் கல்வி, பண்பாட்டுப் படையெடுப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண் சுதந்திரம் உள்ளிட்டவற்றைப் பொட்டில்  அடித்தாற்  போல சொல்லிவிட்டுச் சென்றவர். ஒருவேளை அவர் கடவுள் உள்ளார் என்று கூறியிருந்தால் அவரையே கடவுளாக மாற்றியிருப்பார்கள். அந்த அளவிற்கு எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லியவர். பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக சிங்கம் போல் கர்ஜித்த அவர், ஆண்களுக்கு நிகராக  பெண்களும்  சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இன்னும் பல சாதனைகளுக்கும் போற்றுதலுக்கும் சொந்தக்காரர். 

பெரியாரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!

இந்நிலையில் பெரியாரின் 141-வது பிறந்த நாள்  இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  திமுக தலைவர் ஸ்டாலின் சிம்சனில் உள்ள பெரியார்  சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் திமுக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.