கொரோனா: கே.பி.அன்பழகனிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!

 

கொரோனா: கே.பி.அன்பழகனிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!

கொரோனா: கே.பி.அன்பழகனிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

கொரோனா: கே.பி.அன்பழகனிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு என்று செய்தி வெளியானது. அதன் பிறகு அது தவறான தகவல் என்று கூறப்பட்டது. இதில் குழப்பமான நிலை நிலவுகிறது.

http://

இந்த நிலையில் கே.பி.அன்பழகனை போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும்; பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.