அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை: முக ஸ்டாலின் ட்வீட்!

 

அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை: முக ஸ்டாலின் ட்வீட்!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே நேற்று கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி துரைமுத்துவை பிடிக்க போலீசார் சென்றனர். அப்போது போலீசரிடம் இருந்து தப்பிக்க ரவுடி துரைமுத்து நாட்டு வெடிகுண்டு வீசினார். அந்த வெடிகுண்டு தலைமை காவலர் சுப்பிரமணியத்தின் தலையில் விழுந்து வெடித்ததால், காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்தார். காவலர் உயிரிழந்ததற்கு அரசு இழப்பீடு அளித்தாலும், உயிரிழப்பு இழப்பு தான் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல, காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனவும் புகார் எழுந்திருக்கிறது.

அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை: முக ஸ்டாலின் ட்வீட்!

ஆனால் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் அதிக பயிற்சி அளிக்க வேண்டி இருப்பதாகவும் ஒரு சில சம்பவத்தை வைத்து எல்லாத்தையும் முடிவு செய்ய வேண்டாம் என்றும் டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காவலர் உயிரிழந்தது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தூத்துக்குடியில் காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்!அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல்- காவலர்களின் பாதுகாப்பினை தமிழகக் காவல்துறை உறுதி செய்திட வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.