மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குக! திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு

 

மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குக! திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு

கொரொனா தடுப்புப் பணிகளில் ஈடுபட திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.

மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குக! திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு

இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், “கொரோனா தொற்றின் முதலாவது அலையின்போது ஒன்றிணைவோம் வா என்ற மாபெரும் மக்கள் இயக்கம் மூலம் மனிதநேயப் பணிகளை திமுக ஆற்றியது. இரண்டாவது அலை துவங்கியவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது.

தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருப்பதால் திமுகவின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்றிட வேண்டும், விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வகையில் தெரிவித்து தனிமனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகக கடைப்பிடித்து பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.