மக்களிடம் “கெத்து” காட்டாதீர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யுங்கள்! திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை

 

மக்களிடம் “கெத்து” காட்டாதீர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யுங்கள்! திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை

திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர் பாலு மற்றும் மாநில நிர்வாகிகள், சேலம், நாமக்கல், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 156 நிர்வாகிகள் பங்கேற்றார். கூட்டத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கொங்கு மண்டல நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு தற்போது உள்ள கூட்டணி தொடர வேண்டும் என்று கொங்கு மண்டல நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகளிடமும் தனித் தனியாக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

மக்களிடம் “கெத்து” காட்டாதீர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யுங்கள்! திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “மீண்டும் கலைஞர் ஆட்சி அமைய கழக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நிர்வாகிகளே மக்களிடம் “கெத்து” காட்டாதீர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யுங்கள்” எனக் கூறினார்.