சுயநலத்திற்காக அதிமுகவை அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி- ஸ்டாலின்

 

சுயநலத்திற்காக அதிமுகவை அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி- ஸ்டாலின்

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் “தமிழகத்தை மீட்போம்” பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றயிருக்கிறார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலையார் கோவிலை பாதுகாத்தது திமுக அரசுதான், 2004 ஆம் அண்டு மத்திய அரசு தொல்லியல் துறை கையாகபடுத்த நினைத்த போது அதனை பாதுகாத்து திமுக அரசு தான். தற்போது, ஆன்மீகத்தின் பெயரில் அரசியல் நடத்துபவர்களுக்கு இது தெரியாது. அதிமுக அரசு திருவண்ணாமலைக்கு என்ன செய்திருக்கிறது.

சுயநலத்திற்காக அதிமுகவை அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி- ஸ்டாலின்

இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்த நாடு தமிழ்நாடு தான். அதுவும் திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் இருந்த போது பட்டினி சாவு ஏற்படவில்லை. மக்கள் கையிலிருக்கும் அட்சய பாத்திரத்தை பரித்து பிச்சை பாத்திரத்தை கொடுக்க நினைக்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள். இந்த ஆட்சியில் இலவச அரிசி, பருப்பில் கூட ஊழல் செய்கிறார்கள். மக்களிடம் பெற்ற மனுக்களை திமுக குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது என்று முதல்மைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதனை நாங்கள் தலைமை செயலகத்தில் தான் கொடுத்தோம். அப்படியென்றால் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் குப்பைத்தொட்டி என்கிறாரா? மக்கள் மனு கொடுத்தால் குப்பை தொட்டியில் போடுவது எடப்பாடியின் பழக்கமாக இருக்கலாம். எம்ஜிஆர், ஜெயலலிதாவை பற்றி பேச எடப்பாடி அருகதை இல்லை. சுயநலத்திற்காக அதிமுகவை அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி.

இரட்டை இலையை அடமானம் வைத்தவர் பழனிசாமி, அதிமுகவை அடமானம் வைக்க, அது அவரது சொத்து இல்லை. எடப்பாடி தன்னுடைய கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு கூட துப்பு இல்லாதவர். எடப்பாடி அரசு கொள்ளை அரசு. கொரோனாவை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் அதிமுக அரசு கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது” என பேசினார்.