முதல்வர் தற்போது மகிழ்ச்சியாக இல்லை! 30 அமைச்சர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளனர்: ஸ்டாலின்

 

முதல்வர் தற்போது மகிழ்ச்சியாக இல்லை! 30 அமைச்சர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளனர்: ஸ்டாலின்

திமுக வின் முப்பெரும் விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 66 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் இந்த விழாவில் காணொளி மூலம் உரையாற்றினார்.

அப்போது பேசிய ஸ்டாலின், “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த குமரி தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டத்தில் திமுக பெரும் பங்காற்றியது. போராளி நேசமணி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட போது அவரை வெளியே கொண்டு வர திமுக போராட்டம் தீர்மானம் நிறைவேற்றியது. இது ஆட்சி அல்ல தமிழகத்தின் வீழ்ச்சி. கொள்ளையடிக்கும் ஊழல் ஆட்சி தான் தற்போது நடைபெருகிறது. கொரோனவை வைத்து கொள்ளையடிக்கும் ஆட்சி பாலங்கள் மக்கள் திட்டங்கள் மூலம் கொள்ளையடிக்க மாட்டார்களா?

முதல்வர் தற்போது மகிழ்ச்சியாக இல்லை! 30 அமைச்சர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளனர்: ஸ்டாலின்

மத்திய மாநில அரசுகள் மக்களுக்கான அரசு அல்ல, கார்பெரெட்க்களுக்கான அரசு. முதல்வர் தற்போது நிம்மதியாக இல்லை, மாறாக 30 அமைச்சர்கள் மட்டும் தான் நிம்மதியாக உள்ளனர். காரணம் அதிமுகவில் நடந்து வருவதை பார்த்து கொண்டு இருக்கிறோம். இந்த ஆட்சியை அகற்ற குமரி மக்களின் பங்களிப்பும் அதிகம் இருக்கும் என நம்பிகிறேன்” எனக் கூறினார்.