ராஜேந்திர பாலாஜிக்காக பிரச்சார ஸ்டைலை மாற்றிக்கொண்ட ஸ்டாலின்!

 

ராஜேந்திர பாலாஜிக்காக பிரச்சார ஸ்டைலை மாற்றிக்கொண்ட ஸ்டாலின்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக மறும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய, “நான் எங்கு பிரச்சாரம் செய்தாலும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பேன். ஆனால் முதன்முதலாக ராஜபாளையத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டுப்போடக் கூடாது என கூறி வாக்கு சேகரிக்கிறேன்.

ராஜேந்திர பாலாஜிக்காக பிரச்சார ஸ்டைலை மாற்றிக்கொண்ட ஸ்டாலின்!

சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற அவரை மக்கள் விரட்டியதால் தான் ராஜபாளையத்திற்கு ஓடிவந்தார். ராஜேந்திர பாலாஜியின் அடாவடி பேச்சு, வெட்டுவேன், குத்துவேன் போன்ற வார்த்தைகள் அவரை ரவுடியாக, அதாவது பபூன் ரவுடியாக சித்தரிக்கின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்திருக்க மாட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும், ராஜேந்திர பாலாஜி மீது உயர்நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கை விரைவுப்படுத்தி அவரைச் சிறைக்கு அனுப்புவேன்” என்றார்.