“நோ ப்ராப்ளம்.. நலமாக இருக்கிறேன்” : மு.க ஸ்டாலின் விளக்கம்!

 

“நோ ப்ராப்ளம்.. நலமாக இருக்கிறேன்” : மு.க ஸ்டாலின் விளக்கம்!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தான் நலமுடன் இருப்பதாக மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

சென்னை கொளத்தூரில் நிவாரண உதவிகள் வழங்கிக் கொண்டிருந்த போது மு.க ஸ்டாலினுக்கு திடீரென தலைசுற்றல் மற்றும் மயக்கம் வந்ததாகவும், அதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“நோ ப்ராப்ளம்.. நலமாக இருக்கிறேன்” : மு.க ஸ்டாலின் விளக்கம்!

இந்த நிலையில் கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின், “எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. மருத்துவர்களின் அறிவுரைப்படி பி.பி, ஈ.சி.ஜி பரிசோதனை செய்யப்பட்டது. மற்ற படி எதுவுமில்லை. நோ ப்ராப்ளம். மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டேன்” என விளக்கம் அளித்தார்.