என்னாது தொடர் மழையால் வறட்சியா? வழக்கம்போல் உளறிய ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் பேச்சுக்கள், உளறல்கள், மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளையும், எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களையும் ஏற்படுத்தும். அதனை கிண்டல் செய்துள்ள நெட்டிசன்கள், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கிவருகின்றனர்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை அனல்பறக்க நடந்து வருகிறது. அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி களமிறங்கியுள்ள நிலையில் திமுக சார்பில் தேர்தல் பரப்புரையில் உதயநிதி, கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர். அத்துடன் திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் கிராம சபை என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டும், அதிமுக அரசின் குறைகளையும், ஊழல்களையும் மக்கள் மத்தியில் முன்வைத்து வருகிறார்.
அந்த வகையில் திமுக சார்பில் சென்னை மதுரவாயிலில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முக ஸ்டாலின், “இன்று நான் கிளம்பி வரும்போது ஒரு செய்தியை கேள்விப்பட்டேன், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக வறட்சி ஏற்பட்டு பயிர், விளைநிலங்கள் எல்லாம் அழிந்து நாசமாகின” எனக் கூறினார். தொடர் மழை பெய்தால் பாலைவனம் கூட வறட்சியாக தெரியாது என நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.