ஆர்காடு வீராசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மு.க. ஸ்டாலின்!

 

ஆர்காடு வீராசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மு.க. ஸ்டாலின்!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்துமுடிந்தது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துகணிப்புகள் தெரிவித்தது போல மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியே ஆட்சியை கைப்பற்றியது. 159 இடங்களை கைப்பற்றிய திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. வரும் 7 ஆம் தேதி திமுக தலைவர் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

ஆர்காடு வீராசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மு.க. ஸ்டாலின்!

இந்த சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் உதவித் துணைத் தலைவர் மணிகண்டன் நாயர் – பொது மேலாளர் மெய்யப்பன், ‘தினகரன்’ நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இரண்டு நாட்களுக்கு முன் (02-05-2021), மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

ஆர்காடு வீராசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மு.க. ஸ்டாலின்!

இந்நிலையில் மு.ஸ்டாலின் இன்று உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் – முன்னாள் அமைச்சருமான ஆர்க்காடு நா.வீராசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.