மிசாவையே பாத்துட்டேன்.. ரெய்டுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன் – ஸ்டாலின் அதிரடி!

 

மிசாவையே பாத்துட்டேன்.. ரெய்டுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன் – ஸ்டாலின் அதிரடி!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திமுக பிரமுகர்களையும், திமுக வேட்பாளர்களை குறிவைத்து ஐ.டி ரெய்டு நடத்தப்படுகிறது. இன்று காலை மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் ரெய்டு நடந்ததைத் தொடர்ந்து மருமகன் சபரீசன் வீட்டிலும் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி வீட்டிலும் ரெய்டு நடந்தது. திமுகவை பயமுறுத்த பாஜக ஐ.டி.ரெய்டு நடத்துமாறு அதிகாரிகளை ஏவிவிட்டிருப்பதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மிசாவையே பாத்துட்டேன்.. ரெய்டுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன் – ஸ்டாலின் அதிரடி!

இந்த நிலையில் அரியலூர் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பல நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன். மக்கள் தரப்போகும் வெற்றியை சிறப்பாக பெற்றுத் தாருங்கள். ஆளும் தரப்பின் பொய் பரப்புரை, ரெய்டு போன்ற திசை திருப்பும் நடவடிக்கைகளால் கவனம் சிதற வேண்டாம். மிசாவையே பார்த்த நான் ரெய்டுக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என அதிரடியாக பேசினார்.

மிசாவையே பாத்துட்டேன்.. ரெய்டுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன் – ஸ்டாலின் அதிரடி!

தொடர்ந்து பேசிய அவர், என் மகள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர் போன்றவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி அதிமுகவை மிரட்டி வைத்துள்ளது பாஜக. தேர்தலுக்கு முன்பாக திமுகவை மிரட்டி அச்சுறுத்தலாம் என பாஜக நினைக்கிறது. அதிமுகவை மிரட்டுவது போல திமுகவை மிரட்ட முடியாது. 234 தொகுதிகளிலும் வெல்வோம். ஆதிக்க வாதிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்போம் என்றார்.

மேலும், தமிழகத்தில் புதிய வெளிச்சம் பாய்ச்சும் நம்பிக்கை வெற்றிகரமாக விளைந்து இருப்பதை காணமுடிவதாகவும் திமுகவின் வெற்றி பயணத்தை தடுக்க பாஜக அதிமுக கூட்டணி தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.