‘ASIA BOOK OF RECORDS’ ல் இடம்பிடித்த திமுக எம்.எல்.ஏ சுப்பிரமணியனுக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து!

 

‘ASIA BOOK OF RECORDS’ ல் இடம்பிடித்த திமுக எம்.எல்.ஏ சுப்பிரமணியனுக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து!

திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் மேயர் சுப்பிரமணியன் விளையாட்டில் மிக்க ஆர்வம் கொண்டவர் என்றும் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க தினமும் கடின உடற்பயிற்சி செய்வார் என்றும் கூறப்படுகிறது. அரசியலில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல் , அவ்வப்போது விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் உலக அளவில் நடந்த பல மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றிருக்கிறாராம்.

‘ASIA BOOK OF RECORDS’ ல் இடம்பிடித்த திமுக எம்.எல்.ஏ சுப்பிரமணியனுக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து!

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதின் காரணமாக எல்லாரும் வீட்டிலேயே முடங்கும் சூழல் நிலவி வருகிறது. ஆனால் அதையே சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுப்பிரமணியன், தன் வீட்டின் மொட்டைமாடியில் உருவாக்கப்பட்டுள்ள 8 வடிவமுள்ள ஓடுதளத்தில் தொடர்ந்து 4 மணி நேரம் 8 நிமிடம் 18 வினாடிகள், 1010 முறை இடை நிற்காமல் ஓடி சாதனை படைத்து, கடந்த 18 ஆம் தேதி ‘ASIA BOOK OF RECORDS’ ல் இடம்பெற்றார். அதனால் அவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் “மக்கள் சேவையில் சளைக்காமல் ஓடும் சுப்பிரமணியன், ஊரடங்கு காலத்தில் தனது வீட்டு மாடியில் ‘8’ வடிவில் – 4 மணி நேரத்தில் 1010 முறை ஓடியது ஆசிய சாதனையாக ஏற்கப்பட்டிருக்கிறது. மக்கள் பணியில் மட்டுமல்ல- உடல்நலம் பேணுவதிலும் முன்னுதாரணமானவர்!பாராட்டுகள்! சாதனைகள் தொடர வாழ்த்துகள்! ” என்று அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.