‘பாஜகவில் இணைவார் தளவாய் சுந்தரம்’ ; குமரியில் ஸ்டாலின் பேச்சு!!

 

‘பாஜகவில் இணைவார் தளவாய் சுந்தரம்’ ; குமரியில் ஸ்டாலின் பேச்சு!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர்., சிலை முன்பு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜனை ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

‘பாஜகவில் இணைவார் தளவாய் சுந்தரம்’ ; குமரியில் ஸ்டாலின் பேச்சு!!

அப்போது பேசிய அவர், “கொளுத்தும் வெளியில் வெயிலில் மக்கள் நிற்பதைப் பார்த்தால் அதிமுக ஆட்சியின் கொடுமைக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல என்பதை போல உள்ளது. சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி இங்கே வந்தார். ஊர்ந்து ஊர்ந்து சென்ற அவர் தற்போது ஊர்ஊராக செல்கிறார். அதனை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது .பாம்புக்கடி விஷத்தை விட பழனிசாமியின் கொடுமையானது கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் சசிகலாவுடன் இருந்துகொண்டு தற்போது அவருக்கு துரோகம் செய்து உள்ளார் .அவர் எடப்பாடி உடன் சேர்ந்ததால் தான் தற்போது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தேர்தலுக்கு பிறகு தளவாய் சுந்தரம் நிச்சயம் பாஜகவில் சேருவார்” என்றார்.

‘பாஜகவில் இணைவார் தளவாய் சுந்தரம்’ ; குமரியில் ஸ்டாலின் பேச்சு!!

தொடர்ந்து பேசிய அவர், “பொன் .ராதாகிருஷ்ணன் பல வாக்குறுதிகளை அறிவித்து உள்ளார் .ஆனால் அவர் எதையும் செய்ததாக தெரியவில்லை . அவர் பொன் ராதாகிருஷ்ணன் இல்லை பொய் ராதாகிருஷ்ணன் . கன்னியாகுமரியில் துறைமுகம் வராது என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு இதே மாதிரி பேசுவார்கள் என்று கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின் தமிழகத்தில் அதிமுக திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்படும்.கொரோனா காலத்தில் ஐந்தாயிரம் கொடுங்கள் என்று கூறினோம் .ஆனால் அரசு ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதில் 4,000 ரூபாய் கொடுப்போம்” என்றார்.

‘பாஜகவில் இணைவார் தளவாய் சுந்தரம்’ ; குமரியில் ஸ்டாலின் பேச்சு!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த அரசு ஆயிரம் ரூபாய் வழங்கியது, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீதமுள்ள 4 ஆயிரம் ரூபாயை வழங்குவோம். நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்காக தேர்தல் மட்டுமல்ல, நமது மானத்தை மரியாதையை காப்பாற்ற நடக்கும் தேர்தல், மதவெறி கொண்ட பாஜகவை விரட்டுவதற்கான தேர்தல்.” என்று கூறினார்அத்துடன், “கூட்டமாக கூடும் இடத்தில் வரும் போது, அனைவரும் மாஸ்க் போடுங்கள். உரிமையை காக்க திமுக., உயிரை காக்க மாஸ்க்” என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.