கோபாலபுரத்தில்… அப்பா படத்திற்கு மரியாதை செலுத்திய மு.க.அழகிரி!

 

கோபாலபுரத்தில்… அப்பா படத்திற்கு மரியாதை செலுத்திய மு.க.அழகிரி!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்தார். இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கோபாலபுரத்தில்… அப்பா படத்திற்கு மரியாதை செலுத்திய மு.க.அழகிரி!

பின்னர் தலைமை செயலகத்துக்கு சென்ற ஸ்டாலின் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை விநியோகம், இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்களை தொடக்கி வைத்தார். அதே போல, தமிழகம் முழுவதும் 38 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தையும் தொடக்கி வைத்தார்.

கோபாலபுரத்தில்… அப்பா படத்திற்கு மரியாதை செலுத்திய மு.க.அழகிரி!

இவ்வாறு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி சென்னை கோபாலபுரம் வந்திருக்கிறார். அங்கு வைக்கப்பட்டிருக்கும் தனது தந்தை திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மு.க.அழகிரி, தனது தாயாரிடமும் ஆசி பெற்றுள்ளார்.

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற போது சென்னை வராத மு.க.அழகிரி, இன்று கோபாலபுரம் வந்திருப்பதால் அண்ணன் – தம்பி சந்திப்பு நிகழக்கூடும் என்று கூறப்படுகிறது.