மனைவி இறந்த வேதனையில் மிக்சர் கடை உரிமையாளர் தற்கொலை!

 

மனைவி இறந்த வேதனையில் மிக்சர் கடை உரிமையாளர் தற்கொலை!

கோவை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மனைவி இறந்த வேதனையில் மிக்சர் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜீவா காலனியை சேர்ந்தவர் நாகூர் நவ்ஷாத்(41). இவர் அதே பகுதியில் மிக்சர் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால், மனமுடைந்த நாகூர் நவ்ஷாத் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகினார்.

மனைவி இறந்த வேதனையில் மிக்சர் கடை உரிமையாளர் தற்கொலை!

மேலும், வாழ்வில் விரக்தி அடைந்து காணப்பட்ட அவர் நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்றிரவு நவ்ஷாத் உயிரிழந்தார்.

இதுகுறித்து, பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த வேதனையில் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.