செவ்வாயை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – மிருகசீரிடம் நட்சத்திர பொதுப் பலன்கள்

 

செவ்வாயை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – மிருகசீரிடம் நட்சத்திர பொதுப் பலன்கள்

செவ்வாயை அதிபதியாக கொண்டதும், நட்சத்திர வரிசையில் ஐந்தாவதாக உள்ளதுமான நட்சத்திரம் மிருகசீரிடம்.

இந்த நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் மிதுன ராசியிலும் இடம்பெறும். அதனால் இரண்டு ராசிகளுக்கும் பொதுவான சில குணநலன்கள் காணப்படும். மிருகசீரிடத்தில் பிறந்தவர்கள் துணிச்சல் மிகுந்தவர்களாக இருப்பீர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன உறுதி கொண்டவர்களாகவும், உறுதியான நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள். மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். பெற்றோரிடம் அதிக பாசம் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி என்பதால் அடிக்கடி கனவுலகில் சஞ்சரிப்பார்கள்.

செவ்வாயை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – மிருகசீரிடம் நட்சத்திர பொதுப் பலன்கள்

மிருகசீரிடத்தில் பிறந்தவர்களுக்கு சொல் புத்தியை காட்டிலும், சுயபுத்தி அதிகம். அதனால் மற்றவர்கள் சொல்வதைவிட, தங்களுடைய சுய முடிவின்படி தான் செயல்படுவார்கள். எந்தக் காரியத்தையும் துணிச்சலாக முடிப்பார்கள். மற்றவர்களுக்குக் கட்டுப்படமாட்டார்கள். பெரியவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள். மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் தவறுகளை தட்டிக் கேட்பார்கள். இவர்களுக்கு கல்வியில் அதிகமாக ஆர்வமிருக்காது என்றாலும், பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். கடினமாக உழைப்பவர்களாக இருப்பார்கள். கஷ்டங்களை எளிதில் கடக்க தெரிந்தவர்கள்.