காதலனோடு ஓடிய தாய் -தவித்த மூன்று மகள்கள் -அடுத்து காதலனால் மகள்களுக்கு நேர்ந்த கதி

 

காதலனோடு ஓடிய தாய் -தவித்த மூன்று மகள்கள் -அடுத்து காதலனால் மகள்களுக்கு நேர்ந்த கதி


ஒரு தாயின் காதலனால் ,அந்த தாயின் மூன்று மகள்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் 14, 12 மற்றும் 10 வயதுடைய மூன்று சகோதரிகள் தன்னுடைய தாயோடும் தந்தையோடும் வசித்து வந்தார்கள் .இந்நிலையில் அந்த தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ,அந்தத் பெண் தன்னுடைய மகள்களை அழைத்து கொண்டு தனியாக போய் விட்டார் .அதன் பிறகு அந்த தாய்க்கு வேறு ஒருவரோடு கள்ள காதல் ஏற்பட்டது .அதனால் அவர் அந்த பெண்களை தன்னோடு அழைத்து கொண்டு அந்த காதலனோடு வசிக்க ஆரம்பித்தார் .

காதலனோடு ஓடிய தாய் -தவித்த மூன்று மகள்கள் -அடுத்து காதலனால் மகள்களுக்கு நேர்ந்த கதி


அப்போது அந்த தாயின் காதலன் அந்த மூன்று பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .கடந்த மூன்று ஆண்டுகாலமாக இப்படி பலாத்காரம் நடந்துள்ளது .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் இதை பற்றி அவரின் தாயாரிடம் கூறினர் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தாய்,இது பற்றி அவரின் காதலனிடம் கேட்டார் .அதன் பிறகு அந்த காதலன் அவர்கள் அனைவரையும் அடித்து வீட்டில் அடைத்து வைத்தார் .அதன் பிறகு அந்த மூத்த மகள் அங்கிருந்து தப்பி அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிந்து ,அந்த மூன்று பெண்களையும் அங்குள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்தனர் .அங்கு அந்த பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை அதிகாரிகளிடம் கூறினர் .பின்னர் அந்த அதிகாரிகள் போலீசாரை நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்கள் .மேற்கொண்டு போலீசார் அந்த பெண்களின் தாயின் வளர்ப்பு காதலனை விசாரித்து வருகின்றனர்.