‘எழுதி கொடுத்ததைக் கூட ஸ்டாலினுக்கு ஒழுங்காக படிக்க தெரியல’ : அமைச்சர் விமர்சனம்!

 

‘எழுதி கொடுத்ததைக் கூட ஸ்டாலினுக்கு ஒழுங்காக படிக்க தெரியல’ : அமைச்சர் விமர்சனம்!

மு.க ஸ்டாலினுக்கு எழுதிக் கொடுத்ததைக் கூட சரியாக படிக்க தெரியவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்தார்.

கரூரில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அம்மா ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, ஈபிஎஸ் ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிற மாவட்ட உள் நோயாளிகளும் மருத்துவம் பார்த்து பயனடைகின்றனர். நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின் கரூரில் மருத்துவமனை தொடங்கவில்லை என்று கூறுகிறார். எழுதி கொடுத்ததைக் கூட அவருக்கு சரியாக படிக்க தெரியவில்லை. மருத்துவமனை தொடங்கி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் போதே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடக்கும்” என்று கூறினார்.

‘எழுதி கொடுத்ததைக் கூட ஸ்டாலினுக்கு ஒழுங்காக படிக்க தெரியல’ : அமைச்சர் விமர்சனம்!

தொடர்ந்து , “கடைமடை ஆற்றில் தண்ணீர் சென்றும் ஒரு விவசாயியை வைத்து பொய் சொல்ல சொல்கிறார்கள். அவர் தண்ணியே வரவில்லை என்று பேசுகிறார். திமுக கூட்டணியில் இவர்கள் தான் கேள்வி கேட்க வேண்டும் என்று முன்கூட்டியே சொல்லி விடுகின்றனர். கூடிய சீக்கிரம் அதே இடத்தில் அவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன்’ என்று கூறினார். மேலும், கொரோனா காலத்தில் கூட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளமும் ஓய்வு பெற்றவர்களுக்கு பென்சனும் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.