முதல்வர் வீட்டிலிருந்து சென்றார் ஆர்.பி. உதயகுமார்… வந்தார் அமைச்சர் தங்கமணி!

 

முதல்வர் வீட்டிலிருந்து சென்றார் ஆர்.பி. உதயகுமார்… வந்தார் அமைச்சர் தங்கமணி!

மின் துறை அமைச்சர் தங்கமணி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது என அதிமுகவுக்கு ஏற்பட்ட சலசலப்புக்கு அக்டோபர் 7 ஆம் தேதி விடை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிமுக நிர்வாகிகள் முதல்வரையும் துணை முதல்வரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.

முதல்வர் வீட்டிலிருந்து சென்றார் ஆர்.பி. உதயகுமார்… வந்தார் அமைச்சர் தங்கமணி!

சற்றுநேரத்திற்கு முன்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், அமைச்சர் வேலுமணி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு சென்றார். இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி முதலமைச்சரை சந்தித்துவருகிறார். நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது முதல்வர் பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்றும், ஓ பன்னிர் செல்வம் தான் விட்டுக்கொடுத்துப்போக வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.