ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வட்டி மட்டும் செலுத்தி வருகிறோம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

 

ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வட்டி மட்டும் செலுத்தி வருகிறோம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்சாரத்துறை 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வட்டி மட்டும் செலுத்தி வருகிறோம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மதுரை மண்டல அளவில் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டமானது தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் இலக்கு மின் அளவீடு கருவியை ஸ்மார்ட் கருவியாக இருக்க வேண்டும் என்பதுதான். உற்பத்தி ஆகக்கூடிய மின்சாரத்திற்கும், விநியோகத்திற்கு கூறிய மின்சாரத்திற்கும் இடைவெளியை வித்தியாசமாக இருப்பதால் பல்லாயிரம் கோடி இழப்பீடு மின்வாரியத்திற்கு ஏற்படுகிறது. இதை சரி செய்ய ஸ்மார்ட் கருவியை கொண்டுவருவதே மின்சாரத் துறையின் இலக்கு.

தொழில்துறை மற்றும் வீடுகளுக்கு மின் அளவீட்டு கருவி உள்ளது ஆனால். விவசாயத்திற்கு மின் அளவீடு கருவி இல்லை. இதைப் பற்றி ஆளுநர் உரையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஏற்பட்ட தவறுகள் நிர்வாக கோளாறுகளால் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சாரத் துறையில் 1.59 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. கடன் சுமையில் வட்டி விகிதம் 9.6 அதிகபட்ச வட்டி விகிதம் 13, ஆண்டுக்கு 15,000 கோடி வட்டி செலுத்த வேண்டிய நிர்பந்தத்துக்குள் தமிழக அரசு உள்ளது.

மின்சாரத் துறையில் 9 மாதமாக பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை அதுகுறித்து விளக்கும் பொழுது குறிப்பிட்ட ஒரு பகுதியை எடிட் செய்து விளம்பரப்படுத்தியது அதிமுக. 9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் செயல்படாமல் இருப்பதை பற்றி கேட்டதற்கு இதுவரை எந்த ஒரு விளக்கமும் எதிர்க்கட்சியினர் தெரிவிக்கவில்லை. அவர்கள் செய்யாததை பத்து நாட்களில் நாங்கள் செய்கிறோம்” எனக் கூறினார்.