ட்விட்டரில் உதவி கேட்ட பெண்.. உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர்!

 

ட்விட்டரில் உதவி கேட்ட பெண்.. உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர்!

அவசர தேவைக்காக அமெரிக்கா செல்ல உதவிக் கோரி ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டதைக் கண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக அவருக்கு உதவி செய்துள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து முதல்வரும் சரி, அமைச்சர்களும் சரி மக்கள் வியக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து 50 நாட்கள் தான் ஆகிறது. அதற்குள்ளாகவே அடுத்த 5 ஆண்டு காலம் பொற்காலம் தான் என சொல்லக்கூடிய வகையில் மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளனர். முதல்வரும் அமைச்சர்களும் மக்களுக்கு செய்யும் உதவிகள் வெகுவாக பாராட்டப்படுகிறது.

ட்விட்டரில் உதவி கேட்ட பெண்.. உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர்!

இந்த நிலையில், அமெரிக்கா செல்ல வேண்டுமென ஒரு நபர் ட்விட்டரில் விடுத்த கோரிக்கையை உடனடியாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் ஜோசபின் ரம்யா என்னும் இளம்பெண் தனது தோழியின் சகோதரி உயிரிழந்து விட்டதால் உடனடியாக அவரது பெற்றோர்களை அமெரிக்கா அனுப்பி வைக்க உதவி செய்ய வேண்டும் என்று கூறி அமைச்சர் செஞ்சி மஸ்தானை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதைக் கண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், அந்தப் பெற்றோரின் விவரங்களை இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்து உடனடியாக அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். ட்விட்டரில் விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக அமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.