“10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 35% பாடங்கள் குறைப்பு'” – அமைச்சர் செங்கோட்டைன்

 

“10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 35% பாடங்கள் குறைப்பு'” – அமைச்சர் செங்கோட்டைன்

ஈரோடு

கொரோனா காரணமாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகையினை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 9ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதால், அந்த வகுப்புகளுக்கு மட்டும் 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

“10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 35% பாடங்கள் குறைப்பு'” – அமைச்சர் செங்கோட்டைன்

இதனை முதல்வருடன் கலந்து ஆலோசித்து, பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிக்கை வெளியிடப்படும் எனவும் கூறினார். கொரோனா காரணமாக நடப்பாண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால், ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வினை நடத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மேலும், இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.