“எம்ஜிஆா், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவா்கள் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி”

 

“எம்ஜிஆா், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவா்கள் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் சமுதாய கட்டிடத்திற்கு பூமிபூஜை செய்து கட்டிடப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “சாதிக்கொரு கிணறு இருந்ததை மாற்றி அனைவரும் ஒரே கிணற்றில் தண்ணீா் எடுக்கலாம் என்ற நிலையை உருவாக்கியவா் மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆா். அவா் கொண்டுவந்த திட்டங்கள் மனிதநேயத்தோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. எம்ஜிஆர் சத்துணவை தந்து சாித்திரம் படைத்தாா். உள்ளாட்சி துறையில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தவா் ஜெயலலிதா. எம்.ஜி.ஆா், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவா்கள் வரிசையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளாா்.

“எம்ஜிஆா், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவா்கள் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி”

நாடாளுமன்ற தோ்தலின் போது கல்விக்கடன், விவசாயக்கடன் ரத்து செய்யப்படும் என தொிவித்தனா் ஆனால் அவா்களால் தள்ளுபடி செய்ய முடியவில்லை. இரண்டு ஏக்கா் நிலம் தருவதாகவும் தொிவித்தனா் ஆனால் கையளவு நிலம் கூட தரவில்லை. பொய்யான வாக்குறுதிகளை தருவது தான் திமுகவினரின் வேலையாக உள்ளது. அரசு மக்களுக்கு எதை செய்யவேண்டுமோ அதை செய்துவருகிறது. திராவிடக்கழகம் பொியாரால் உருவாக்கப்பட்டது…

தோ்தல் அறிக்கை தாயாாிக்க முதல்வா் பல்வேறு ஆலோசனை நடத்திவருகிறார். தோ்தல் அறிக்கை எப்படி இருக்கப்போகிறது என்று நீங்கள் பாா்க்கத்தான் போகிறீா்கள்” எனக் கூறினார்.