“முதியோர்கள் வாக்கு அதிமுகவுக்கு வரும் என்பதால் முதியோர் தபால் வாக்கு முறைக்கு திமுக எதிர்ப்பு”

 

“முதியோர்கள் வாக்கு அதிமுகவுக்கு வரும் என்பதால் முதியோர் தபால் வாக்கு முறைக்கு திமுக எதிர்ப்பு”

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, “மதுரையின் வளர்ச்சிக்கு வியாபாரிகள் பங்கு மிகவும் முக்கியமானது. வியாபாரிகளிடம் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் படி கேட்டுக் கொண்டு உள்ளேன். திமுக ஆட்சியில் மதுரையில் ரவுடியிசம் தலை தூக்கியது. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக வியாபாரிகள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். வியாபாரிகளுக்கு முதல்வர் உறுதுணையாக இருக்கிறார்.

“முதியோர்கள் வாக்கு அதிமுகவுக்கு வரும் என்பதால் முதியோர் தபால் வாக்கு முறைக்கு திமுக எதிர்ப்பு”

அனைத்து சமுதாய மக்களையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். முதியோர்கள் வாக்கு அதிமுகவுக்கு வரும் என்பதால் முதியோர் தபால் வாக்கு முறைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது” எனக் கூறினார்.