நல்லவர் ஆட்சியில்தான் மழை பொழியும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

 

நல்லவர் ஆட்சியில்தான் மழை பொழியும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

முல்லைப்பெரியார் அணையிலிருந்து 1,295 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இத்திட்டம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “நம் மக்கள் குடிக்க தண்ணீர் கொடுத்தாலே அவர்களுக்காக எதையும் செய்வார்கள். இந்த தலைமுறைக்கும் மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் கொடுக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். அண்டா, குண்டா, சட்டி உள்ளிட்ட எதுக்கும் இனிமேல் வேலை இல்லை. மதுரை மக்கள் வீடுகளில் இருந்தபடியே தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். நல்லவர் ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழியும் எனல்கூறுவார்கள். திருவள்ளுவரின் திருக்குறளும் அவ்வாறே கூறுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக முதல்வர் ஆட்சி நடைபெறுகிறது.

நல்லவர் ஆட்சியில்தான் மழை பொழியும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுள்ளனர். எங்களுடைய திட்டங்களையும் செயல்பாடுகளையும் கண்டு எங்களுக்கு ஆதரவளிப்பார்கள். புயல், மழை காலங்களில் பொதுமக்களுக்கு தாமதமின்றி ரேசன் பொருட்கள் கிடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள ரேசன்கடைகளை மேடான பகுதிக்கு மாற்றி பொருட்களை பாதுகாக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்” எனக் கூறினார்.