“அரசை குறை சொல்வதே ஸ்டாலினுக்கு வேலையாகி விட்டது” – அமைச்சர் செல்லூர் ராஜு

 

“அரசை குறை சொல்வதே ஸ்டாலினுக்கு வேலையாகி விட்டது” – அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுக அரசை விமர்சிப்பதையே ஸ்டாலின் வேலையாக வைத்திருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

“அரசை குறை சொல்வதே ஸ்டாலினுக்கு வேலையாகி விட்டது” – அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக உறுப்பினர்கள் கட்டமைப்பை அதிகரிக்க ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் திமுக நடத்தி வரும் அதே வேளையில், அதிமுக எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகிறது. தேர்தலுக்கு முன்னர் வழக்கமாக நடக்கும் மோதலை போல, அதிமுக அரசின் ஒவ்வொரு நகர்வையும் அறிக்கை வாயிலாக விமர்சித்து வருகிறார் மு.க ஸ்டாலின். அதற்கு அதிமுக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

“அரசை குறை சொல்வதே ஸ்டாலினுக்கு வேலையாகி விட்டது” – அமைச்சர் செல்லூர் ராஜு

இந்த நிலையில் அமைச்சர் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘அதிமுகவில் எந்த அணியும் இல்லை பிணியும் இல்லை. அதிமுக அரசை குறை சொல்வதே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேலையாகிவிட்டது’ என தெரிவித்தார்.