“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் ” : அதிமுக எம்எல்ஏ பரபரப்பு புகார்!

 

“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் ” : அதிமுக எம்எல்ஏ பரபரப்பு புகார்!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் ” : அதிமுக எம்எல்ஏ பரபரப்பு புகார்!

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் அதே கட்சியை சேர்ந்த எம்ல்ஏ ராஜவர்மனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே. கடந்த அக்டோபர் மாதம் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் நடந்த அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ ராஜவர்மன், “அமைச்சர் ஒருவர் தன்னை கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வருகிறார்.

“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் ” : அதிமுக எம்எல்ஏ பரபரப்பு புகார்!

என்னை கட்சியிலிருந்து நீக்கினாலும் நான் மக்களுக்கு செருப்பாக உழைப்பேன். கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம்.அதை மறந்து கட்சியின் வெற்றிக்காக பாடுபடவேண்டும் என்று கூறியிருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் ” : அதிமுக எம்எல்ஏ பரபரப்பு புகார்!

இந்நிலையில் இன்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்கு போட்டியிட்டாலும் தோல்வி நிச்சயம் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.