ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னடைவு!

 

ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னடைவு!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்கம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடைந்தது. இச்சூழலில் இன்று ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னடைவு!

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தற்போது அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். அதிமுக அமைச்சர்களில் சிலர் முன்னிலையையும் சிலர் பின்னடைவையும் சந்தித்துள்ளனர். அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்சி சம்பத், தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் முன்னிலையில் இருக்கின்றனர். ஆனால் அமைச்சர்கள் பென்ஜமின், மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார், ஓஎஸ் மணியன் ஆகியோர் பின்னடைவில் இருக்கின்றனர்.