‘பிள்ளையை போல என்னை பார்த்தவர் ஜெயலலிதா’.. கண் கலங்கிய அமைச்சர்!

 

‘பிள்ளையை போல என்னை பார்த்தவர் ஜெயலலிதா’.. கண் கலங்கிய அமைச்சர்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று சிவகாசியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பெண்களைக் கிண்டல் செய்யாத ஆட்சி அதிமுக ஆட்சி. கட்டப்பஞ்சாயத்து இல்லாத ஆட்சி. நான் எவ்வளவு வேகத்தில் பேசினாலும் யாரையும் இழிவாக பேசியதில்லை. முதல்வரின் தாயாரையே இழிவு படுத்துகிறார்கள் என்று ஆவேசமாக பேசினார்.

‘பிள்ளையை போல என்னை பார்த்தவர் ஜெயலலிதா’.. கண் கலங்கிய அமைச்சர்!

இதைத் தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகள் தலையெடுக்க கூடாது. முதலமைச்சர் கண்கலங்கியதைப் பார்த்த நானும் கண் கலங்கினேன். ஸ்டாலின் தான் ஆ.ராசாவை தூண்டி அவ்வாறு பேச வைத்திருக்கிறார். அமைச்சராக இருந்த காலத்தில் நம்ப வைத்து கழுத்தை அறுத்தவர்கள் எல்லாரையும் பார்த்து விட்டேன். எல்லாருடைய பிழைப்பையும் கெடுத்தவர் ராஜவர்மன் என்று கூறினார்.

‘பிள்ளையை போல என்னை பார்த்தவர் ஜெயலலிதா’.. கண் கலங்கிய அமைச்சர்!

மேலும், நான் யாரையும் கெடுத்தேன் என ஒருவர் கூட சொல்ல முடியாது. ராஜவர்மனை ஜெயிக்க வைக்க நான் போராடியது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது ஜெயலலிதா என் உடல்நிலை குறித்து அடிக்கடி கேட்டறிந்தார். பெற்ற பிள்ளையை போல் என்னை பார்த்தவர் ஜெயலலிதா என்று நா தழுதழுக்க பேசினார். ஜெயலலிதா பற்றி பேசிய போது அவரது கண்களில் கண்ணீர் கசிந்தது…!