“10 வருஷம் அமைச்சரா இருந்து என்ன பன்னாரு”; செல்லூர் ராஜூவை விமர்சித்த பொன்முடி!

 

“10 வருஷம் அமைச்சரா இருந்து என்ன பன்னாரு”; செல்லூர் ராஜூவை விமர்சித்த பொன்முடி!

10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தும் செல்லூர் ராஜு ஒரு கல்லூரியை கூட உருவாக்கவில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 10வது நாளாக துறைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ மதுரை மேற்கு தொகுதியில் இருபாலர் அரசு கல்லூரி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 3 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்லூரிகள் இருப்பதாக தெரிவித்தார். 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த போதும் அவர் தொகுதியில் ஒரு கல்லூரி கூட ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் பொன்முடி கூறினார்.

“10 வருஷம் அமைச்சரா இருந்து என்ன பன்னாரு”; செல்லூர் ராஜூவை விமர்சித்த பொன்முடி!

தொடர்ந்து பேசிய அவர், முதல்வரிடம் கேட்டால் தான் கிடைக்கும் என்ற காரணத்தினால் தற்போது கோரிக்கை விடுப்பதாகவும் அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ஒரு கல்லூரி அமைப்பது சாதாரண விஷயமல்ல. 34 ஆசிரியர்கள், ஆண்டுக்கு ரூ.2.25 கோடி ஊதியம், கட்டுமான பணிக்கு 12 கோடி தேவை என்று தெரிவித்தார்.