‘அதிமுக எப்போதுமே ஹவுஸ்ஃபுல் தான்’ திமுக தான் காலியாக இருக்கிறது: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

 

‘அதிமுக எப்போதுமே ஹவுஸ்ஃபுல் தான்’ திமுக தான் காலியாக இருக்கிறது:  அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே எஞ்சியுள்ளன. இதற்காக பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தயாராகி வருகின்றன. வழக்கம் போல தற்போது தேர்தலுக்கான கூட்டணி பிரச்னைகள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், தேமுதிக தணித்து நின்று போட்டியிட விரும்புவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலக போகிறதா என கேள்வி எழுந்துள்ளது. அதே போல பாஜக தான் அதிமுக கூட்டணிக்கு தலைமை வகிக்க போவதாக கூறப்பட்டது.

‘அதிமுக எப்போதுமே ஹவுஸ்ஃபுல் தான்’ திமுக தான் காலியாக இருக்கிறது:  அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

இது குறித்து இன்று பேசிய முதல்வர், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் இன்னும் தேர்தலுக்கு 7 மாதங்கள் இருப்பதால் அப்போது அதிமுக தலைமை இது குறித்து முடிவடுக்கும் என கூறினார். அதனைத்தொடர்ந்து அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக இவ்வாறு இருக்கையில், திமுகவில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக எப்போதுமே ஹவுஸ்ஃபுல் தான், திமுகவில் தான் காலியிடம் இருக்கிறது என்றும் அதிமுகவில் வெற்றிடம் என்பதே இல்லை என்றும் கூறினார். மேலும், முதல்வருக்கு எதிராக வாக்களித்து வருவது குறித்து சபாநாயகர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இதில் மறைக்க கூடியது ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.