‘அதிமுகவில் போரும் இல்லை, வாரும் இல்லை’ – உள்கட்சி பூசல் குறித்து ஓ.எஸ்.மணியன் கருத்து!

 

‘அதிமுகவில் போரும் இல்லை, வாரும் இல்லை’ – உள்கட்சி பூசல் குறித்து ஓ.எஸ்.மணியன் கருத்து!

முதல்வர் வேட்பாளர் யார் என்பது நான்கு சுவருக்குள் கட்சிக்குள் எடுக்கப்படும் முடிவு என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

‘அதிமுகவில் போரும் இல்லை, வாரும் இல்லை’ – உள்கட்சி பூசல் குறித்து ஓ.எஸ்.மணியன் கருத்து!

நாகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “அதிமுக இப்போதைக்கு இரட்டை தலைமையில் செயல்படுகிறது என்றும், அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு, போரும் நடக்கவில்லை. வாரும் நடக்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓபிஎஸ் நியமித்ததும், சசிகலா ஈ.பி.எஸ் நியமித்ததும் கடந்தகால கதை என்று கூறிய அமைச்சர், சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக கட்சி தமிழகத்தில் இருக்காது என்ற டி.ஆர் பாலுவின் பேராசை கனவு பலிக்காது என்றும், கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? என்றும் பதிலடி கொடுத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ஓஎஸ் மணியன், மக்களின் வரவேற்பை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வர் ஆவார் என்று கருத்து கூறியது குறிப்பிடத்தக்கது.