அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் படுதோல்வி!

 

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் படுதோல்வி!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்கம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஏப்ரல் 29ஆம் தேதி தான் மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இச்சூழலில் இன்று ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் படுதோல்வி!

தமிழகத்தில் 11 அமைச்சர்கள் ஆரம்பத்திலிருந்தே பின்னடைவில் இருந்தனர். அதில் ஒருசிலர் கரைசேர்ந்து விட்டாலும் ராஜேந்திர பாலாஜி, கே.சி. வீரமணி ஆகிய இருவரும் தோல்வியடைந்தனர். இச்சூழலில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் படுதோல்வி அடைந்திருக்கிறார். ஆவடியில் அமைச்சர் பாண்டியராஜனை திமுக வேட்பாளர் நாசர் 53,274 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.