நீட் தேர்வுக்கு தயாராகுங்கள்; அரசு கைவிட்டுவிட்டது என்ற எண்ணம் வரக்கூடாது- அமைச்சர் மா.சுப்ரமணியன்

 

நீட் தேர்வுக்கு தயாராகுங்கள்; அரசு கைவிட்டுவிட்டது என்ற எண்ணம் வரக்கூடாது- அமைச்சர் மா.சுப்ரமணியன்

நீட் தேர்வு வேண்டாம் என்பதே திமுக அரசின் கொள்கை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு தயாராகுங்கள்; அரசு கைவிட்டுவிட்டது என்ற எண்ணம் வரக்கூடாது- அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. நீட் தேர்வு நடத்தக்கூடாது என்பதே திமுகவின் உறுதியான கொள்கை.

நீட் தேர்வு ஆய்வுக்குழு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்றத்தில் நாளைக்கு விசாரணைக்கு வரும் வழக்கை பொறுத்து நீட் விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுக்கும். மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பணிகள் தொடர்ந்து வருகிறது. நீர் தேர்வுக்கு விலக்கு பெறும்வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும். அரசு கைவிட்டுவிட்டது என்ற எண்னம் வரக்கூடாது என்பதற்காகவே நீட் பயிற்சி அளித்துவருகிறோம்” என தெரிவித்தார்