கொரோனாவிலிருந்து மீண்டார் அமைச்சர் காமராஜ்

 

கொரோனாவிலிருந்து மீண்டார் அமைச்சர் காமராஜ்

அமைச்சர் காமராஜ் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்டார் அமைச்சர் காமராஜ்

கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் காமராஜுக்கு சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் அவர் உடனடியாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கொரோனாவிலிருந்து மீண்டார் அமைச்சர் காமராஜ்

இதை தொடர்ந்து காமராஜ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இதை தொடர்ந்து மருத்துவமனை, காமராஜ் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 25 ஆம் தேதிவெண்டிலேட்டர் அகற்றப்பட்ட நிலையில் 30 ஆம் தேதி அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

கொரோனாவிலிருந்து மீண்டார் அமைச்சர் காமராஜ்

இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் காமராஜ் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார். கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு திரும்பியதும் சில நாட்கள் ஓய்வெடுக்கும் அவர் மீண்டும் பொது பணியில் தொடர்வார் என்று கூறப்படுகிறது.