ஒன்றிணைவோம் வா என்ற திட்டம் மூலம் ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார்- அமைச்சர் காமராஜ்

 

ஒன்றிணைவோம் வா என்ற திட்டம் மூலம் ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார்- அமைச்சர் காமராஜ்

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. மக்களுக்கு கூடுதல் அரிசி வழங்க ரூ,438 கோடி நிதி ஒதுக்கி மத்திய தொகுப்பிலிருந்து அரிசி வாங்கப்பட்டது. உணவுப்பொருள்கள் தடையின்றி கிடைக்கிறது. பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது. இதுவரை சந்திக்காத சூழலை சந்தித்து கொண்டிருக்கிறோம். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் ஏப்ரல் மாதத்திற்கு 98% நபர்களுக்கு கொடுத்துள்ளோம். ஜூன் மாதத்திற்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தடை செய்யப்பட்ட 845 இடங்களில் 2 லட்சத்து 93 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ துறை மூலம் கொரோனா தொற்று வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள், குணப்படுத்தும் சிகிச்சை முறைகளில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக தான் உள்ளது.

ஒன்றிணைவோம் வா என்ற திட்டம் மூலம் ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார்- அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் உணவு இல்லை, கிடைக்கவில்ல என்ற பிரச்சனை இல்லை சாப்பாடு கிடைக்கவில்லை என்ற பிரச்சனையும் இல்லை. 65 நாட்கள் மேலாக இருந்தாலும் அவர்களுக்கு சாப்பாடு கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே அரசின் மீது பழி சொல்ல வேண்டும் என்பதற்கான குறை சொல்லி வருகிறார், ஒன்றிணைவோம் வா என்ற திட்டம் மூலம் அரசியல் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார். திமுக தலைவர் பொறுப்பான நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் பொறுப்பில்லாமல் செயல்படக்கூடாது” எனக் கூறினார்.