இந்த அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வேதனை என்பதே இல்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு

 

இந்த அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வேதனை என்பதே இல்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “தமிழகத்தில் கொரோனாவை நாம் கட்டுப்படுத்தி உள்ளோம். இனி பண்டிகை காலம் என்பதால் நாம் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதால் அரசு கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. முதல்வர் மாவட்ட வாரியாக சென்று களப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பாராட்டியுள்ளார். பள்ளிகள், திரையரங்குகளை திறப்பது பற்றி மருத்துவக்குழுவின் அறிக்கை பெற்று நேற்று முதல்வர் விவாதித்துள்ளார்.

இந்த அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வேதனை என்பதே இல்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு

திரையரங்குகள் திறப்பு பற்றி மருத்துவக்குழுவின் அறிக்கை அடிப்படையில் முதல்வர் விரைவில் நல்ல முடிவினை அறிவிப்பார். நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வது அவருடைய உரிமை. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது அவருடைய தனிப்பட்ட உரிமை. அரசியலுக்கு வருவது பற்றி ஏதாவது காலத்தினை குறித்து வைத்திருக்கலாம். தேர்தலுக்கு முன்பு அரசியலுக்கு வந்தாலும், அல்லது எப்போது வந்தாலும் அந்த முடிவினை எடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை மற்றவர்களை ஒப்பிட்டு பார்க்கவில்லை. அதிமுக தேர்தல் பணிகளை முழுவீச்சில் மேற்க்கொண்டு வருகிறோம்

இந்த ஆட்சியில் மக்களுக்கு வேதனை என்பதே இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜீ.ஆர் தொடந்து 3 தொடர் வெற்றி பெற்றது போன்று தற்பொழுது 3வது முறையாக தொடர் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்” என்றார்.