“சீமான் ஒரு அரைவேக்காடு..எம்.ஜி.ஆர் பற்றி பேச அருகதை இல்லை” – அமைச்சர் காட்டம்!

 

“சீமான் ஒரு அரைவேக்காடு..எம்.ஜி.ஆர் பற்றி பேச அருகதை இல்லை” – அமைச்சர் காட்டம்!

தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, மரியாதை செலுத்தினார். அதோடு, எம்.ஜி.ஆரின் நினைவு நாளுக்காக மொட்டை போட்டுக் கொண்ட அதிமுகவினருக்கு வேஷ்டி சட்டைக் கொடுத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘எம்.ஜி.ஆரை தமிழக மக்கள் தெய்வமாக வணங்குகிறார்கள். அவரை பழித்துப்பேசுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று கூறினார்.

“சீமான் ஒரு அரைவேக்காடு..எம்.ஜி.ஆர் பற்றி பேச அருகதை இல்லை” – அமைச்சர் காட்டம்!

தொடர்ந்து, ‘எம்.ஜி.ஆர் பற்றி பேச சீமானுக்கு எந்த அருகதையும் கிடையாது. அவரை போன்ற அரைவேக்காடுகள் தான் ரகளையை கிளப்ப வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பிடித்தாரா என்றே தெரியவில்லை. எல்லா மக்களுக்கும் தெரிந்திருக்கும் விஷயம் கூட அவருக்கு தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.

மேலும், சொத்து குறித்து வெள்ளை அறிக்கை விட தான் தயாராக இருப்பதாக தெரிவித்த அமைச்சர், கமல்ஹாசன் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என்று சவால் விட்டார். தமிழ் சினிமா வளர்ச்சி அடைவதற்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.