‘சமூக இடைவெளியுடன் தான் செயற்குழு கூட்டம் நடந்தது’ ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி!

 

‘சமூக இடைவெளியுடன் தான் செயற்குழு கூட்டம் நடந்தது’ ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி!

அதிமுக செயற்குழு பற்றி மு.க ஸ்டாலின் விமர்சித்து பேசியதற்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்திருக்கிறார்.

முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவெடுக்க அண்மையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட அதிமுக பிரமுகர்கள் பங்கேற்ற நிலையில், வேட்பாளர் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறையும், அதிமுக தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அக்கூட்டத்தில் ‘நான் தான் முதல்வராக போட்டியிடுவேன்’ என ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் மோதல் ஏற்பட்டதால், கூட்டம் நிறைவடைந்தது.

‘சமூக இடைவெளியுடன் தான் செயற்குழு கூட்டம் நடந்தது’ ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி!

இந்த கூட்டம் குறித்து திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், கிராம சபை கூட்டத்தால் மட்டும் தான் கொரோனா பரவுமா? செயற்குழு கூட்டத்தால் கொரோனா பரவாதா? என விமர்சித்திருந்தார். இந்த நிலையில் மு.க ஸ்டாலின் கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையுடன், உரிய சமூக இடைவெளியை பின்பற்றி தான் செயற்குழு கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.