விவசாயிகள் முதுகில் குத்தியது திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

 

விவசாயிகள் முதுகில் குத்தியது திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

திமுக தான் விவசாயிகள் முதுகில் குத்தியது என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் குறைந்த பட்ச விலை என்பதே இருக்காது என்றும் அச்சம் எழுந்துள்ளது. ஆனால் இந்த மசோதாக்களால் விவசாயிகளுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது என பிரதமர் மோடி தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், இதன் மூலமாக விவசாயிகளின் நலன் காக்கப்படும் என்றும் கூறினார்.

விவசாயிகள் முதுகில் குத்தியது திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

இருப்பினும் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு கேடு விளைவிக்கும் எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், வரும் 28 தேதி திமுக அதன் தோழமை கட்சிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறது. மேலும், விவசாயிகளை அழிக்க எண்ணும் அதிமுக வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் திமுக குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாததால் விவசாய சட்டத்துக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது என்றும் விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக தான் என்றும் தெரிவித்தார்.