அதிமுகவை மீட்டெடுப்போம் என தெரிவித்த தினகரனை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்

 

அதிமுகவை மீட்டெடுப்போம் என தெரிவித்த தினகரனை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை வள்ளலார் நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒரு கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை அமைச்சர் ஜெயக்குமார் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.

அதிமுகவை மீட்டெடுப்போம் என தெரிவித்த தினகரனை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்கவேண்டும். மாநில அரசுக்கு வரி வருவாய் குறைவு தான். ஆனால் அதற்காக மக்கள் மீது திரும்பத் திரும்ப வரி போட முடியாது. அதிமுக – பாஜக கூட்டணி குறித்து தனியரசு தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து, அதிமுக – பாஜக கூட்டணியையே அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்புகின்றனர். முக ஸ்டாலின் தான் சிறுபான்மையினரை அவமதித்துவருகிறார். எனவே அவர்களின் வாக்கு திமுகவுக்கு கிடைக்காது. அதிமுக சிறுபான்மையினரை பொதுதொகுதியில் போட்டியிடவைத்து அழகு பார்த்தது.

வரும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா இல்லாத அதிமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்று 2021 இல் ஆட்சி அமைக்கும். அதிமுகவை மீட்டெடுப்போம் என தினகரன் கூறிவருவது ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்பதைப் போன்றது” என தெரிவித்தார்.