‘நாட்டு நடப்பு தெரியாமல் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்கிறார்’ – அமைச்சர் விமர்சனம்!

 

‘நாட்டு நடப்பு தெரியாமல் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்கிறார்’ – அமைச்சர் விமர்சனம்!

தமிழக அரசை விமர்சித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.

சென்னையில் செய்தியாளுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘நாட்டு நடப்பு தெரியாமல் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாகத் தான் இருக்கிறது. தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் வேளாண் சட்டங்களை வரவேற்கிறோம். வேளாண் சட்ட வழக்கில் யாரும் விமர்சனம் செய்யக்கூடாது. இதனை மத்திய அரசு தான் முடிவெடுக்கும் என்று கூறினார். மேலும், அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

‘நாட்டு நடப்பு தெரியாமல் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்கிறார்’ – அமைச்சர் விமர்சனம்!

‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டமாக பரப்புரை மேற்கொள்ளும் அவர், அதிமுக அரசின் மீது பல குற்றச்சாட்டுகளையும் விமர்சங்களையும் முன்வைத்து வருகிறார். இலவசத்தை பார்த்து ஓட்டு போடாதீர்கள். இது நேர்மைக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். ஆட்சி மாற்றம் வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறார். கமல்ஹாசனின் விமர்சனங்களுக்கு அதிமுக அமைச்சர் பதிலடி கொடுத்து வரும் நிலையில், தற்போது அமைச்சர் ஜெயக்குமாரும் பதில் அளித்திருக்கிறார்.