‘சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை’ – அமைச்சர் ஜெயக்குமார்

 

‘சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை’ – அமைச்சர் ஜெயக்குமார்

சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக இடையே மோதல் நீடிக்கிறது. அரசை விமர்சித்து மு.க ஸ்டாலின் வெளியிட்டு வரும் ஒவ்வொரு அறிக்கைக்கும் அதிமுக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக எந்த கொம்பனுக்கும் பயப்படாது என்றும் திமுகவில் இருப்பவர்கள் யாரும் காந்தியோ, இயேசுவோ கிடையாது என்றும் காட்டமாக தெரிவித்திருந்தார்.

‘சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை’ – அமைச்சர் ஜெயக்குமார்

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், சட்ட ஒழுங்கு பிரச்னை குறித்து பேச திமுகவுக்கு தகுதியே இல்லை என்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், அமித்ஷா வருகைக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பாஜகவை பலப்படுத்தவே அவர் வருவதாகவும் அமைச்சர் கூறினார்.