“காழ்ப்புணர்வுடன் திமுக செயல்படுகிறது” அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

 

“காழ்ப்புணர்வுடன் திமுக செயல்படுகிறது” அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

உள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக காழ்ப்புணர்வுடன் செயல்படுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மருத்துவ படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க கூடாது என திமுக காழ்ப்புணர்வுடன் செயல்படுகிறது. முதல்வரும் அரசு பள்ளியில் தான் படித்தார். அதனால் அரசு பள்ளி மாணவர்களின் கஷ்டம் அவருக்கு தெரியும். உள் ஒதுக்கீட்டில் அரசியல் செய்வதாக ஸ்டாலினின் அடுத்தடுத்த அறிக்கைகளே ஒப்புக் கொள்கின்றன.” என தெரிவித்தார்.

“காழ்ப்புணர்வுடன் திமுக செயல்படுகிறது” அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

மேலும், பெண்களை போற்ற வேண்டுமே தவிர தூற்றக்கூடாது, திருமாவளவன் கூறியது கண்டிக்கத்தக்கது என்றும் ஆளுநர் பதவியை விமர்சிக்கும் திமுக மத்தியில் ஆட்சியில் இருந்த போது ஏன் அப்பதவியை திமுக ஒழிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார். முன்னதாக, உள் ஒதுக்கீடு விவாகரத்தை எதிர்த்து இன்று காலை திமுக சார்பில் கிண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.