அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் கே.எஸ்.தஸ்தகீர் மறைவு!

 

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் கே.எஸ்.தஸ்தகீர் மறைவு!

சென்னை

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் கே.எஸ்.தஸ்தகீர் (45) உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார்.

தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தேசூர்பேட்டையை சேர்ந்தவர் இவரது சகோதரர் கேஸ்.எஸ். தஸ்தகீர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் கே.எஸ்.தஸ்தகீர் மறைவு!

கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கே.எஸ்.தஸ்கீர், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் தொற்றில் இருந்து மீண்ட நிலையில், அவருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்படவே மீண்டும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, கொரோனா தொற்று பரவல் காரணமாக நண்பர்கள், திமுக நிர்வாகிகள் அஞ்சுலி செலுத்த நேரில் வர வேணடாம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேட்டுக்கொண்டு உள்ளார்.