’63 குண்டுகள் முழங்க’ அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம்!

 

’63 குண்டுகள் முழங்க’ அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம்!

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 13ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, நேற்று இரவு 11 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். இன்று பிற்பகல் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி கிராமத்திற்கு ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனிடையே அவரது மறைவையொட்டி சென்னை மற்றும் தஞ்சையில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

’63 குண்டுகள் முழங்க’ அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம்!

அமைச்சரின் உடலுக்கு அவரது உறவினர்களும் ஏராளமான மக்களும் கண்ணர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதே போல அவரது உடலுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அமைச்சரின் உடல், வன்னியடியில் உள்ள தென்னந்தோப்பிற்கு கொண்டு செல்லப்பட்டு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

’63 குண்டுகள் முழங்க’ அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம்!

பின்னர், அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு 63 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் கொரோனாவால் உயிரிழந்ததால் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் முறையாக பின்பற்றப்பட்டது.