“ஆட்சி கேவலமாக சென்று கொண்டிருக்கிறது” – அதிமுக அமைச்சர் உளறல்!

 

“ஆட்சி கேவலமாக சென்று கொண்டிருக்கிறது” – அதிமுக அமைச்சர் உளறல்!

அதிமுக ஆட்சி கேவலமாக சென்று கொண்டிருகிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

“ஆட்சி கேவலமாக சென்று கொண்டிருக்கிறது” – அதிமுக அமைச்சர் உளறல்!

திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கியதற்கு எதிராக திமுக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அரசின் முடிவில் தலையீட முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டதால் நாம் மகிழ்ச்சியாக பொங்கல் பரிசு பெற்றோம். இதையெல்லாம் நீங்கள் வாழ்த்த மாட்டீர்கள். ஆனால் கேட்பையில் நெய் வடிக்கிறது என்றால் கேட்பாருக்கு புத்தி எங்க போச்சு என்று அறிவுரை மட்டும் வழங்குவீர்கள்” என்றார்.

“ஆட்சி கேவலமாக சென்று கொண்டிருக்கிறது” – அதிமுக அமைச்சர் உளறல்!

தொடர்ந்து பேசிய அவர், ” தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்று பாருங்கள்; சிந்தியுங்கள் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. என்ன பேசுகிறோம்; யார் ஆட்சி செய்கிறோம் என்பது கூட தெரியாமல் அமைச்சர் சீனிவாசன் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.