“திமுகவை அழிக்க ஸ்டாலின் ஒருவரே போதும்” – அமைச்சர் சி.வி.சண்முகம்

 

“திமுகவை அழிக்க ஸ்டாலின் ஒருவரே போதும்” –  அமைச்சர் சி.வி.சண்முகம்

திமுகவை அழிக்க ஸ்டாலின் ஒருவரே போதும் என்று அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

“திமுகவை அழிக்க ஸ்டாலின் ஒருவரே போதும்” –  அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக அரசு பாடுபட, விட்ட இடத்தை பிடித்த விட முனைப்பு காட்டி வருகிறது திமுக. இதற்கான பணிகளை கட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்து வருகிறார்.

“திமுகவை அழிக்க ஸ்டாலின் ஒருவரே போதும்” –  அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், “அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமரவைக்கும் வேண்டும் என்று இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. சாதாரண தொண்டனுக்கும் பதவி கொடுத்து அழகு பார்க்கும் ஒரே கட்சி அதிமுக. திமுகவில் அப்படி இல்லை. கருணாநிதி குடும்பத்தினருக்கு மட்டுமே பதவி கிடைக்கும். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. திமுகவிற்கு எதிரியே ஸ்டாலின்தான் . ஸ்டாலினுக்கு எதிரி அவருடைய நாக்குதான். திமுகவை அழிக்க ஸ்டாலின் ஒருவரே போதும்” என்றார்.