உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா! தனியார் மருத்துவமனையில் அனுமதி!!
Jun 30, 2020, 17:43 IST1593519222000
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரவியதாகவும், அதன் காரணமாக அவர் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் தனக்கு கொரோனா இல்லை என்றும் தான் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை, தனிமை படுத்தப்படவும் இல்லை என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.